search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
    X

    மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

    • அதிகாரிகள் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த பள்ளூர் கிராமம் வாட்டர் பம்ப் ஹவுஸ் அருகே தொடர்ந்து மர்ம கும்பல் மணல் கடத்துவதாக அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பேரில் தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு டிராக்டரில் மண்ணை திருட்டுத்தனமாக நிரப்பி கொண்டு இருந்தனர்.

    பின்னர் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது டிராக்டர் டிரைவர் மற்றும் உடனிருந்த நபர்கள் டிராக்டரை விட்டு விட்டு தப்பி ஓடினர். இந்த நிலையில் அங்கிருந்த டிராக்டர், 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×