search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடிந்து விழும் நிலையில் அரசு கட்டிடம்
    X

    இடிந்து விழும் நிலையில் அரசு கட்டிடம்

    • 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது
    • அசம்பாவிதம் ஏற்படும் முன் இடித்து அகற்ற வலியுறுத்தல்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள செய்யாறு சாலையில் கிராம நிர்வாக அலுவலகம் , வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு ஆகியவை செயல்பட்டு வருகின்றன . இந்த அலுவலகங்களுக்கு தினசரி 50 - க்கும் மேற் பட்டோர் வந்து செல்கின்றனர் .

    இதன் அருகிலேயே சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பழுதடைந்து பயன் பாட்டில் இல்லாததுணை தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் உள்ளது . இந்த கட்டிடம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது .

    பாழடைந்த இந்த கட்டி டம் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது . கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வரும் நபர்கள் தெரியாமல் இந்த பாழடைந்த கட்டிடத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை விடுவதும் , அமர்ந்திருப்பதும் வாடிக்கையாக உள்ளது .

    இந்தக் கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை உணர்த்த கட்டிடத்தின் முன்பு கடமைக்காக கயிறு கட்டி உள்ளனர் . இந்த கட்டிடம் இடிந்து விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படுவ தற்கு முன் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

    Next Story
    ×