என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை ஆயுதபடை வளாகத்தில் பல்பொருள் அங்காடி
- டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்
- போலீசார் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் பல் பொருள் அங்காடியை காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டி தீபாசத்யன் முன்னிலையில் நேற்று இரவு காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இதனையடுத்து எஸ்.பி. தீபா சத்யன் பல்பொருள் அங்காடியை குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி விற்பனையை தொடங்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் விஸ்வேஸ்வரய்யா (மாவட்ட தலைமையகம்) முத்துக்கருப்பன் (சைபர் கிரைம்) டிஎஸ்பிக்கள் பிரபு (ராணிப்பேட்டை), பிரபு (அரக்கோணம்), இன்ஸ்பெக்டர்கள் சசிகுமார், சதீஷ்குமார், தனஞ்செழியன், சீனிவாசன், விஜயலட்சுமி, சரவணன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட இந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பல்பொருள் அங்காடியில் காவலர்கள் தீயணைப்பு துறை சிறைத்துறை ஓய்வு பெற்ற காவலர்கள் உள்ளிட்டோர் பல் பொருட்களை வாங்கி பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்