search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் கடத்திய லாரி பறிமுதல்
    X

    மண் கடத்திய லாரி பறிமுதல்

    • டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி மற்றும் வேடந்தாங்கல் பகுதிகளில் நேற்று சப்கலெக்டர் பாத்திமா ரோந்து பணியில் ஈடுபட்டார்.

    அப்போது மகேந்திரவாடியில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் சாலையில் டிப்பர் லாரி ஒன்று எதிரே வந்தது.

    அந்த டிப்பர் லாரியின் டிரைவர் சப் கலெக்டர் வருவதை பார்த்து லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பின்னர் லாரியை சோதனை செய்து பார்த்த போது அதில் முறையாக அனுமதியின்றி கிராவல் மண்ணை கடத்திவந்தது தெரியவந்தது.

    உடனே சப் கலெக்டர் பாத்திமா நெமிலி தாசில்தார் பாலசந்தரை அழைத்து பறிமுதல் செய்யப்பட்ட லாரியை பாணாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து நெமிலி தாசில்தார் பாலசந்தர், நெமிலி வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் தயாளன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×