என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு துவக்க விழா குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்தும் மற்றும் தி.மு.க. ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், சட்டத்திட்ட திருத்தத்துறை இணை செயலாளர் ஞானசேகரன், தலைமை கழக வழக்கறிஞர் கணேசன், செய்தி தொடர்புக்குழு துணை செயலாளர் சையத் ஹபீல், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், குமுதா, துரைமஸ்தான், மாவட்ட பொருளாளர் சாரதி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய செயலாளர்கள் சேஷா வெங்கட், மாணவர் அணி அமைப்பாளர் வினோத் உள்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்