search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
    X

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

    • வருகிற 25-ந்தேதி ஆற்காட்டில் நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில், முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ,

    படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெரும் நோக்கில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆற்காடு வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிட தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய உள்ளனர்.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ,பட்டபடிப்பு ,நர்சிங், பொறியியல், எம்.பி.ஏ உள்பட கல்வித் தகுதிகளை உடைய வேலை தேடுவோர் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான வேலையினை தங்கள் அளவிலேயே தேர்வு செய்து பயன்பெறலாம்.

    விருப்பமும், தகுதியும் உள்ள வேலை தேடுவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தற்குறிப்பு மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×