search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ்காரர் திடீர் சாவு
    X

    போலீஸ்காரர் திடீர் சாவு

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்,

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). போலீஸ்காரர்.

    இவரது மனைவி யமுனா (34). இவர்களுக்கு பிரத்தியா (8), சஞ்சனா (4) என 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சதீஷ்குமாருக்கு காலில் அடிபட்டதால் பணிக்கு வரவில்லை.

    இந்நிலையில் நேற்று இரவு இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் உறவினர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர் பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×