search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
    X

    மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    • நேருக்குநேர் மோதியது
    • பேலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 56).

    இவர் நேற்று முன்தினம் இரவு ராணிப்பேட்டை தனியார் திரையரங்கம் அருகே தனது மோட்டர் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த சோளிங்கர் அடுத்த நாரைகுளம் மேடு பகுதியை சேர்ந்த தீனா (21) ஓட்டி வந்த மோட்டர் சைக்கிள் சரவணன் மீது நேருக்குநேர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகாக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த தீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×