search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்கள் புகார்
    X

    போலீஸ் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்கள் புகார்

    • பாணாவரம் அருகே அறையில் சிறை வைப்பு?
    • 2 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள மேல்வீராணம் பகுதியில் தனியார் இரும்பு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் சுமார் 35-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்ளுக்கு 2 மாதமாக மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் மாத ஊதியம் கேட்டால் வெளி ஆட்களை கொண்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது.

    வடமாநில தொழிலாளர்களில் 5 பேர் நேற்று மாலை காய்கறி வாங்க வெளியே சென்றிருந்த போது மீதம் இருந்த 27 தொழிலாளர்களை தொழிற்சாலையின் உள்ளே அடைத்து வைத்து பூட்டி வைத்துள்ளதாகவும் அவர்களை வெளியே அனுப்ப மறுப்பதாவும், மேலும் வெளியே சென்ற தொழிலாளர்களை தொழிற்சாலையின் உள்ளே செல்ல அனுமதிக்காமல் மிரட்டி வெளியேற்றியதாகவும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பாணாவரம் ேபாலீசில் வடமாநில தொழிலாளர்கள் புகார் அளித்தனர்.

    தொழிற்சாலை நிர்வாகம் தரவேண்டிய ஊதியத்தையும், தொழிற்சாலையின் உள்ள அடைத்து வைத்திருக்கும் 25-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×