search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாணாவரத்தில் செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள்
    X

    பாணாவரத்தில் செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள்

    • அதிக குற்ற செயல்கள் நடப்பதாக புகார்
    • சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    பாணாவரம் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டுசம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமாா் 6 பைக்குகள் திருடப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட வர்களிடமே சி.சி.டி.வி. கேமரா பதிவை கேட்பதாக கூறப்படுகின்றது.

    பாணாவரத்தில் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களை முறையாக பராமரிக்காததால் பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. பல சி.சி.டி.வி. கேமராக்கள் காட்சி பொருளாகமட்டுமே காட்சியளிக்கின்றன.

    தமிழக அரசால் பொது இடங்களிலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இதனால் பல குற்றச்செயல்களுக்கு மூன்றாவது கண்ணாடியாக இருந்து வரும் சி.சி.டி.வி. கேமராக்கள் பார்வைக்காக மட்டுமே சில இடங்களில் உள்ளதால் குற்ற செயல்கள் ஈடுபடுபவர்கள் எந்த ஒரு தயக்கம் பயமும் இன்றி தனது கைவரிசை காட்டுகின்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாக அலுவலர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் குற்ற செயல்களை தடுக்க செயல்படாமல் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை செயல்பட வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×