காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை
காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது
Published on

சோளிங்கர்:

சோளிங்கர் மற்றும் சுற்று வட் டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சோளிங்கர் கிழக்கு பஜார் தெருபகுதியில் ஒரு கும்பல் காட்டன் சூதாட் த்தில் ஈடுபட்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர்.

அவர்களில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத் தினர். விசாரணையில் அவர் சோளிங்கர் குமரன் தெருவை சேர்ந்த விஜயன் (வயது 43) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயனை கைது செய்தனர். அவரிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com