போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

எஸ்.பி. தீபா சத்யன் அறிவுரைமுன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்
போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
Published on

கலவை:

கலவை போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, கலவை போலீஸ் நிலையத்திற்கு அரசால் வழங்கப்பட் டுள்ள பொருட்களையும் பார்வையிட்டார்.

மேலும் கலவைப் பகுதியில் உள்ள ரவுடிகள் குறித்தும் விசாரித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்துள்ளதை பார்வை யிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை உடனுக்குடன் முடிக்க வும், போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

போலீஸ்நிலையத்துக்கு வருபவர்களிடத்தில், எளிமையாக வும், அன்பாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். இன்ஸ்பெக்டர் பாரதி தாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், மூர்த்தி, சங்கர் ஆகி யோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com