search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
    X

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த காட்சி.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

    • 250 வாகனங்கள் பரிேசாதனை.
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கையை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ராணிப்பேட்டையில் உள்ள 250 தனியார் பள்ளி வாகனங்களை வருடாந்திர தணிக்கை ஆய்வு இன்று ராணிப்பேட்டை அடுத்த ஆட்டோ நகர் தேசிய நெஞ்சாலையொட்டி உள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த ஆய்விற்கு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் பூங்கொடி முன்னிலை வகித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் ராமசாமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-

    கடந்த ஆண்டு பள்ளி வாகனங்கள் விபத்து ஏதுமில்லை. அதேபோன்று இந்த ஆண்டும் ஓட்டுனர்கள் கண்ணும் கருத்துமாக விபத்துக்கள் ஏதுமின்றி வாகனங்களை இயக்க வேண்டும். டிரைவர்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வபோது கண் பார்வை பரிசோதனை செய்து கொள்ளுங்கள், வாகனங்கள் இயக்கும் போது செல்போன் பயன்படுத்த கூடாது.

    ஆய்வு

    டிரைவர் ஆகிய உங்களை நம்பி தான் குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புகின்றனர். இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த வருடாந்திர ஆய்வில் பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, ஸ்டேயரிங், வாகன படிகட்டு, அவசர வழி, ஜன்னல் உள்ளிட்ட பல்வேறு நிலை குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. பிரபு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், செங்குட்டவேல் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நல சங்க நிர்வாகிகள், டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×