search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
    X

    இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

    • 3 மாதமே ஆன கை குழந்தை உள்ளது
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டு காலனி பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் ரஜினி (வயது28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு சரளா (22) என்கிற மனைவியும், 3 மாதமே ஆன கை குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரளா தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

    குழந்தையின் தொடர் அழுகை சத்தம் கேட்டு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் மயங்கிய நிலையில் இருந்த சரளாவை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×