இலவச மருத்துவ முகாம்

பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டதுபொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்
மருத்துவ முகாம் நடந்த காட்சி.
மருத்துவ முகாம் நடந்த காட்சி.
Published on

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே பள்ளுர் ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது.

முகாமிற்கு பள்ளுர் ஊராட்சி மன்றதலைவர் பிரதாப் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றிய துணை தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தார்.

இம்முகாம் சவீதா மருத்துவ கல்லூரி மருத்துவ மனை மற்றும் பள்ளுர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் ஏற்பாடு செய்யபட்டது. பொதுநலமருத்துவம், கண், எலும்பு, பல், தோல், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் நலம், பெண்கள் நலம், ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com