search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
    X

    விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

    • 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்
    • பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நடந்தது

    நெமிலி:

    பனப்பாக்கத்தை அடுத்து கல்பலாம்பட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வஜ்ஜிரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வா கிகள் இயற்கை விவசாயி பிர பாகரன், பாலாஜி, கோபிக் ஆகியோர் முன்னிலை வகித்த.னர். சிறப்பு அழைப்பாளராக சங்க மாநில தலைவர் ஈசன் முருகசாமி கலந்துகொண்டார்.

    உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். .

    தென்னை, பனையிலிருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களை ஏற்ப டுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது.

    இதில் நெமிலி, பனப்பாக்கம், பாணாவரம், காவேரிப்பாக் கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×