துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

9-ந் தேதி கொடியேற்றம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
Published on

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மகாபாரத பெருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து, தினசரி மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களும் நடைபெற்றன. மகாபாரத பெருவிழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையடுத்து,

பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் மாலை தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com