search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
    X

    மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரைமஸ்தான், மாவட்ட பொருளாளர் ஏவி.சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி கலந்து கொண்டு, இளைஞரணி மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என பேசினார்.

    கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி வருகிற 17-ந் தேதி சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு, இளைஞர் அணி செயலாளரும்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் வெள்ளை சீருடை அணிந்து கலந்து கெள்ள வேண்டும் என்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி உள்பட செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பா ளர்கள், உள்ளாட்சி, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் குமுதா நன்றி கூறினார்.

    Next Story
    ×