என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தி.மு.க. செயற்குழு கூட்டம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் நாளை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாளை மாலை 4 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமையில் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் வருகிற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு குறித்தும், வாக்குச்சாவடி,பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் வாக்காளர்களின் விவரங்கள் சேகரித்தல் குறித்தும், கட்சிவளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
எனவே கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்