search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
    X

    பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

    • புத்தகத்தில் கையொப்பமிட்டு வாழ்த்து
    • திட்டப்பணிகளை பார்வையிட்டார்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றிய பகு திகளில் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணி களை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டார்.

    அப்போது அந்த வழியாக செல்லும்போது அகரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கலெக்டர் சென்றார்.

    அங்கு மாணவ-மாணவிகளிடம் திருக்குறள், வாய்ப்பாடு உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். அதில் 4-ம் வகுப்பு மாணவி. ராகவி கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறினார்.

    இதையடுத்து மாணவியை கலெக்டர் வளர்மதி பாராட்டி புத்தகத்தில் தன் கையொப்பமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் பள்ளி ஆசிரியர், மாணவ மாணவிகளை அவர் பாராட்டினார்.

    Next Story
    ×