கல்லூரி மாணவனிடம் செயின் வழிப்பறி

2 பேர் கைது போலீசார் விசாரணை
கல்லூரி மாணவனிடம் செயின் வழிப்பறி
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் செல்வ மந்தை பகுதியில் 17 வயது கல்லூரி மாணவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையா ளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்து அவர் அணிந்திருந்த சுமார் ஒன்றரை பவுன் செயினை பறித்து சென்றுள்ளனர்.

இது குறித்து மாணவன் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தாலுகா இன்ஸ் பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் செல்வமந்தை கட்டன் கூடா பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் பிடித்தனர்.

அவர்கள் ராமாபுரம் பகுதியை சேர்ந்த தினகரன் (22) ஹரிபாபு. என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து செயின் மற்றும் செல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com