search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
    X

    காவேரிப்பாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

    • விவசாயிகள் அல்லாத மற்ற நபர்கள் நெல் விற்பனை செய்தால் நடவடிக்கை
    • கலெக்டர் தொடங்கி வைத்து எச்சரிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் 2023-ம் ஆண்டில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய முதற் கட்டமாக 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கிட உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. அதில் நேற்று முதல் 23 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் செயல் பட தொடங்கின.

    காவேரிப்பாக்கம் பேரூ ராட்சி சமுதாய நலக்கூடத் தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத் தில் கலெக்டர் வளர்மதி விவ சாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை பூஜை செய்து தொடங்கிவைத்தார்.

    விவசாயிகளிடமிருந்து சிட்டா, அடங்கல் ஆவணங்களை கிராம நிர்வாக அலு வலரிடம் பெற்று அதை கணி னியில் பதிவு செய்திடவேண் டும்.பதிவின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரின் கையொப்பம் பெற்று விவசா யிகள் நேரடி நெல் கொள்மு தல் நிலையத்துக்கு நெல் கொண்டு வரும் பட்சத்தில் அவர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படு கிறது.

    நெல் மூட்டைகள் மூன்று நாட்கள் மையங்களில் வைக் கப்பட்டு பின்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழ கத்தின் குடோன்களான குகைநல்லூர் மற்றும் ராணிப் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள இரண்டு குடோன் களில் அடுக்கி வைக்கப்படும். குகைநல்லூர் குடோனில் 7,000 மெட்ரிக் டன், ராணிப் பேட்டை, வாலாஜாவில் உள்ள குடோனில் 16 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இட வசதி உள்ளது.

    நடப்பாண்டில் விவசாயிக ளிடம் இருந்து வரப்பெறும் நெல்லை பொறுத்து சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் வரை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விவசா யிகள் அல்லாத வியாபாரிகள் மற்ற நபர்கள் நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட் டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண் காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் ஏதே னும் குளறுபடிகள், புகார்கள், குறித்து விவசாயிகள் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை 8807825796 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×