அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் மீது தாக்குதல்

மதுபோதையில் அட்டகாசம் 3 பேருக்கு வலைவீச்சு
அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் மீது தாக்குதல்
Published on

சோளிங்கர்:

சோளிங்கர் அடுத்த ரெண்டா டியை சேர்ந்தவர் தீனன் (வயது 51). இவர் சோளிங்கர் பணிம னையில் வேலூர் திருத்தணி செல்லும் பஸ்சில் கண்டக்ட ராக பணியாற்றி வருகிறார். டிரைவராக பெருங்காஞ்சியை சேர்ந்த பாலன் உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வேலூரில் இருந்து சோளிங்கர் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 9.45 மணிக்கு திருத்த ணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சோளிங்கர் பஸ் நிலையத்தில் மதுபோதையில் ஏறிய 3 பேர் பாட்டிகுளம் பகுதியில் செல்லும்போது வெள்ளாத் தூரில் பஸ் நிறுத்த வேண்டும் என்று கூறினர்.

இது விரைவு பஸ் என்பதால் அங்கு நிற் காது என கண்டக்டர் தீனன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கண்டக்டரையும், டிரைவரையும் ஆபாசமாக திட்டி, பயணிகள் முன்னிலையில் சரமாரியாக தாக்கினார்.

பின்னர் இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் தீனன் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் என்னையும், டிரைவரையும் தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர். போலீசார் 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com