அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் பல்வேறு பகுதிகளுக்கு விரைவு

பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொலை தொடர்பு சாதனங்கள் மருத்துவ முதலுதவி கருவிகள் கொண்டு சென்றனர்
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் பல்வேறு பகுதிகளுக்கு விரைவு
Published on

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோ ணத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படை மையம் இயங்கி வருகிறது.

தற்போது வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வீரர்களை அனுப்ப தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கேட்டுக்கொண்டது.

அதன் பேரில் 25 பேர் கொண்ட 4 குழுக்களை அனுப்ப கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்த ரவிட்டார். இதையடுத்து துணை கமாண்டன்ட் சங்கரபாண்டியன், சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் 2 குழுக்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், 2 குழுக்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஏற்கனவே ஒரு குழு சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

பேரிடர் மீட்புப் படை வீரர்கள் ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், கயிறு, நவீன தொலை தொடர்பு சாதனங்கள் மருத்துவ முதலுதவி கருவிகள், ஆகியவற்றை கொண்டு சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com