அ.தி.மு.க. சார்பில் 10 இடங்களில் நீர், மோர் பந்தல்

சு.ரவி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அ.தி.மு.க. சார்பில் 10 இடங்களில் நீர், மோர் பந்தல்
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தக்கோலம், சேந்தமங்கலம், அருகில பாடி, அரக்கோணம் நகரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் மோர் பந்தல்கள் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டது.

சு.ரவி எம்எல்ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் ஒன்றிய மாணவரணி செயலாளர் வழக்கறிஞர். ஆர். பிரகதீஸ்வரன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட இளைஞரணி இணை செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் எல். வினோத்குமார் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் என். சங்கர், அவைத் தலைவர் தயாளன், பேரூராட்சி செல்வம், மாவட்ட பாசறை செயலாளர் கே. அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நெமிலி ஏ.ஜி. விஜயன், அரக்கோணம் பிரகாஷ், மாவட்ட ஜெ. பேரவை துணைத் தலைவர் ஆட்டுப்பாக்கம் ஏ.வி. ரகு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அரக்கோணம் நகர கழக செயலாளர் பாண்டுரங்கன், இளம் பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் ஷாம்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com