search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
    X

    தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

    • விளையாடிய போது விழுந்தது
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வர் குமரேசன் ( வயது 30 ) . கட்டிட மேஸ்திரி . இவரது மனைவி சித்ரா ( 25 ) . இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.

    இதில் 3 - வது குழந்தை சஞ்சனா விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள தரை மட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டாள். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஆபத்தான நிலையில் இருந்த சஞ்சனாவை அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சஞ்சனா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×