search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் மீது மரம் விழுந்தது
    X

    வீட்டின் மீது மரம் விழுந்தது

    • அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை
    • அதிகாரிகள் ஆய்வு

    அரக்கோணம்:

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. அதன்படி அரக்கோணம் அடுத்த அரிகிலபாடி கிராமத்தில் ரமேஷ் என்பவரது வீடு அரக்கோணம் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ளது. நேற்று மழையின்போது புளிய மரம் ஒன்று அவரது வீட்டின் மீது விழுந்தது.

    ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் அருகில் உள்ள தந்தை வீட்டில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாகயாருக்கும் எவ்வித பாதிப் பும் ஏற்படவில்லை. சேதம் அடைந்த வீட்டினை அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் பார்வையிட்டார்.

    மழையால் தணிகைபோளூர் பெரிய ஏரி நிரம்பி கடவாசல் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் கடவாசலில் மீன்களை பிடித்து வருகின்றனர். அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் மேம்பாலம் அருகே உள்ள செந்தில் நகரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    Next Story
    ×