search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.13½ கோடியில் மேம்பாலம் கட்டும் பணி
    X

    மேம்பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜையை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    ரூ.13½ கோடியில் மேம்பாலம் கட்டும் பணி

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை அருகே கட்டப்படுகிறது

    வாலாஜா:

    வாலாஜா நகரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி சுமார் 300-க்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகளும் உள்புற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் தேசிய நெடுஞ்சாலயில் வாகன விபத்து ஏற்பட்டால் இங்கு தான் சிகிச்சைக்காக கொண்டு வருவர்.

    மேலும் வாலாஜா சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம மக்களும் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தான் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவார்கள்.மேலும் இம்மருத்துவமனையானது நெடுஞ்சாலை ஒட்டி அமைந்துள்ளது.

    இந்த மருத்துவமனை சாலையின் இருபக்கமும் கட்டிடங்கள் உள்ளன. நோயாளிகள் சாலையை கடக்கும் போது அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் இதனால் பெரிதும் சிரமப்பட்டு பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும் நோயாளிகளும் கோரிக்கை வைத்தனர்.அதன் அடிப்படையில் கடந்த நிதியாண்டில் ரூ.13½ கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.

    இதில் சித்தூர்- பெங்களூர் சாலையில் வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் மற்றும் நோயாளிகள் சென்று வர இலகுரக வாகன சுரங்கபாதை அமைக்கப்படுகிறது.

    இதன் ஆரம்ப கட்ட பணிக்காக வாலாஜா சித்தூர் பெங்களூர் சாலையில் இருபுறமும் கடந்த 3-ந் தேதி ஆக்கிரமிப்பு எடுக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை அருகே மேம்பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி வாலாஜா எம்.பி.டி சாலையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரூ.13.½ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    Next Story
    ×