search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் மோடி போட்டியிட கோரி பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
    X

    பிரதமர் மோடி போட்டியிட கோரி பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

    • ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட கோரி பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
    • கடலாடி வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    சாயல்குடி

    கடலாடி பா.ஜ.க. சார்பில் முத்தாலம்மன் கோவிலில் பா.ஜ.க. சார்பில் 3-வது முறையாக 2024-ல் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமையவும், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட கோரியும் 124 பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கடலாடி வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட செயலாளர் வெற்றி மாலை, ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் கதிர்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்சாமி, ஒன்றிய பொதுச் செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.

    இதில் மாணவர்களின் சிலம்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய பொருளாளர் ஜெயராமலிங்கம், மாவட்ட தரவு மேலாண்மைச் செயலாளர் ஹரிஹரன், ஒன்றிய செயலாளர்கள் முருகன், மேகஜோதி, மூர்த்தி, ஒன்றிய துணைத் தலைவர்கள் சபரிநாதன், முத்துமாரி, மாணிக்க மீனாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×