search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
    X

    வ.உ.சி. சிலைக்கு தர்மர் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

    • பரமக்குடியில் வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.
    • தற்போது அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் பா.ஜ.க.விற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகா சபையின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 151 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    காட்டு பரமக்குடி பகுதியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர்.முத்தையா, சதன்பிரபாகர், பரமக்குடி நகர செயலாளர் ஜமால் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ம.தி.மு.க. சார்பில் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் குணா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, பரமக்குடி நகர் தலைவர் அகமது கபீர், மாவட்ட பொதுச் செயலாளர் ரபீக் அகமது, மாநில பேச்சாளர் ஆலம், மாநில நெசவாளர் அணி கோதண்டராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    தர்மர் எம்பி. தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கடலாடி முன்னாள் ஒன்றிய செயலாளர் மூக்கையா, பேரூர் செயலாளர் சதீஷ், கடலாடி ஒன்றிய செயலாளர் சண்முக பாண்டியன், வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், பரமக்குடி வின்சென்ட் ராஜா, நயினார் கோயில் வக்கீல் நவநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரஜினிகாந்த், கொடிக்குளம் சத்தியேந்திரன், கரைமேல் குடியிருப்பு சேதுராமன் உள்பட பலர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதன் பின்பு தர்மர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் ஆணி வேராக திகழும் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் ஓ. பன்னீர்செல்வம் பின்னால் தான் உள்ளனர். அ.தி.மு.க.விற்கு அவர்தான் தலைமை ஏற்க வேண்டும் என விரும்புகின்றனர். அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை சேர்க்கலாமா? என்பது குறித்து தலைமைதான் முடிவு செய்யும். தற்போது அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் பா.ஜ.க.விற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது சோலைராஜா, சரவணன், தினேஷ்குமார், சிவா தேவன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×