என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி
- சாயல்குடியில் வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி விழா நடந்தது.
- ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்பவனியில் பங்கேற்றனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் மாலையில் ஆலய வளாகத்தில் ஜெபமாலை ஜெபித்து பவனியை வழிநடத்தி திருப்பலியில்பங்கேற்றனர்.
திருப்பலிக்கு முன் ஒப்புரவு அருள் சாதனம் வழங்கப்பட்டது. திருப்பணியை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மின் ஒளி அலங்காரத்தில் அன்னை ஆரோக்கிய மாதா சாயல்குடி வீதிகளில் நகர்வலம் வந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு சாயல்குடி பங்குத்தந்தை பாஸ்கர் டேவிட் தலைமை தாங்கினார்.தொன் போஸ்கோ சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் ஆரோக்கியம், முதல்வர் ஆல்பிரட், பங்கு தந்தைகள் சார்லஸ், பிரபு முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மாதா கோவில் நிர்வாக தலைவர்- செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் காமராஜ் தொம்மை செபஸ்டியன் ஆகியோர் செய்து இருந்தனர். சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகள் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்பவனியில் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்