search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அப்புறப்படுத்தப்படாமல் கிடக்கும் ஆமை உடல்
    X

    அப்புறப்படுத்தப்படாமல் கிடக்கும் ஆமை உடல்

    • தொண்டி கடற்கரையில் அப்புறப்படுத்தப்படாமல் ஆமை உடல் கிடக்கிறது.
    • சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையில் கடந்த 4 நாட்களுக்கு முன் பெரிய ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. இந்த நிலையில் அந்த ஆமை உடலை பரிசோதனைக்கு எடுத்து செல்லப்படாமல் அங்கேயே கிடக்கிறது.

    வழக்கமாக இது போன்ற கடல் உயிரினங்கள் கரை ஒதுங்கும்போது அதை எடுத்து செல்லப்பட்டு அவை அரிய வகை சேர்ந்தவையா? ஆணா? பெண்ணா? இறந்ததற்கான காரணம் ஆகியவை குறித்து பரிசோதனை நடத்தப்படும்.

    மேலும் கடலின் மாசு பாடு காரணமாக இறந்ததா? பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமானதால் இறந்ததா ?என ஆய்வு மேற்கொள்ளப் பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் ஆமையின் உடல் எடுத்து செல்லப் படாமல் கடற்கரையிலேயே துர்நாற்றத்து டன் கிடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் உள்ளனர்.

    இந்த நிலையில் ஆமையின் உடலை அப்புறப்படுத்தி உரிய பரிசோதனை மேற்கொள்ளப் பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×