ஒடிசா ரெயில் விபத்து- புதிய தமிழகம் கட்சி அஞ்சலி

ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ராமநாதபுரம் நகர் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்
ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு புதிய தமிழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு புதிய தமிழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட செயலாளர் பாலுச்சாமி தலைமை தாங்கினார். இணை செய லாளர் மலைச்செல்வம் மற்றும் துணைச் செயலா ளர்கள் முத்துக்கூரி, மகேஷ் குமார், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பேரன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஜூன் 15-ந் தேதி தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடை பெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டம் ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் தலா 5 வாகனங்கள் வீதம் நிர்வாகிகள் தொண்டர்கள், திரண்டு செல்ல முடிவு செய்யப் பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் ஒடிசா மாநி லத்தில் நடந்த கோர ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முனியசாமி (ராமநாதபுரம்), சேகர் (திருப்புல்லாணி), சுடர் (மண்டபம்), லாசர் (கடலாடி ஒன்றிய செயலாளர்), பெரியசாமி (முதுகுளத்தூர்), ராஜா (நயினார்கோவில்), பரமக்குடி நகர் செயலாளர் சிங்கராஜன் உள்பட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் நகர் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com