search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனை விதைகள் நடவு செய்யும் பணி
    X

    அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு வழங்கினார். அருகில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் உள்ளார்.

    பனை விதைகள் நடவு செய்யும் பணி

    • தெற்குத்தரவை ஊராட்சியில் பனை விதைகள் நடவு செய்யும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 36 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் தெற்குத்தரவை ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் மூலம் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெற்குத்தரவை ஊராட்சியில் அம்மன் கோவில் ஊரணி மற்றும் வைரவன் கோவில் பகுதியில் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து தெற்குத்தரவை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் அனைத்து துறையின் திட்டங்கள் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருவதை பார்வையிட்டு, ஊராட்சி யின் வளர்ச்சிக்காக இத்தகைய திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். பின்னர் ஊரக வளர்ச்சித் துறை, குழந்தைகள் வளர்ச்சித்துறை, மீன்வளத் துறை, வேளாண்மை துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மூலம் 36 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், ஊரக வளர்ச்சித் துறை உதவி திட்ட அலுவலர் குமரேசன், பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப் பெருமாள், தெற்குத்தரவை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சாத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×