search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம்
    X

    மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம்

    • மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    முதுகுளத்தூர்

    அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை பாதியாக குறைத்ததை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

    யூனியன் ஆணையாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் தேவ பிரியதர்ஷினி ஆகிேயார் நேரில் வந்து, நீங்கள் அளித்த கோரிக்கை சரியானது. இதை விரைவில் சரி செய்து தருவதாக உறுதி அளித்ததின் பெயரில் இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. போராட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    தாலுகா தலைவர் முனியசாமி, துணைத் தலைவர் முத்து கண்ணன், இணை செயலாளர் மயில்சாமி, உறுப்பினர்கள் வில்வதுரை, ராமர் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி முருகன், அங்குதன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×