search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சார ஊழியா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
    X

    மின்சார ஊழியா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

    • மின்சார ஊழியா்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் மின்கட்டண வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

    ராமநாதபுரம்

    மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து மின்சார பணியாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் பணிபுறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகங்களில் பணியாற்றும் பொறியாளா் முதல் கேங்மேன் வரை அனைத்துத் தரப்பினரும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால் மின்கட்டண வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. மின் கட்டணம் செலுத்த வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சக்கரக்கோட்டையில் உள்ள மின் மேற்பாா்வையாளா் அலுவலக வளாகத்தில் பொறியாளா்கள் ஐக்கிய சங்கத்தின் தலைவா் ரவி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடந்தது.

    அதில் பங்கேற்ற தொழிலாளா்கள் மத்திய அரசின் புதிய மின்சாரத் திருத்த மசோதாவைக் கைவிடக் கோரி கோஷம் எழுப்பினர்.

    Next Story
    ×