search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முல்லை பெரியாறு அணை மூலம் குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க வேண்டும்
    X

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    முல்லை பெரியாறு அணை மூலம் குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க வேண்டும்

    • முல்லை பெரியாறு அணை மூலம் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க வேண்டும்.
    • கிழக்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆணைக்கிணங்க ராமநாத புரம் கிழக்கு மாவட்ட பாட் டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தேனிசை. அக்கிம் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டபம் ஒன்றிய செயலா ளர் வெங்கடேசன் வரவேற் றார்.

    பசுமை தாயகத்தின் மாநில துணைச்செயலாளர் பொறியாளர் கர்ண மஹா ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், ராமநாதபுரம் ஒன் றிய செயலாளர் பொறியா ளர் ஷரீப், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன், திருப்புல்லா ணி ஒன்றிய தலைவர் ராஜேந்தி ரன், இளைஞர் சங்க செய லாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், திருப்புல்லாணி

    ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாவட்ட சிறு பான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம், மாணவர் சங்கர் செயலாளர் சந்தோ சம், கடலாடி ஒன்றிய செய லாளர் இருளாண்டி, உழவர் பேரியக்கம் தலைவர் ஐ.பி.கணேசன் மற்றும் நிர்வாகி கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவே தனியார் நிதி நிறுவனங்கள் சட்டத்துக்கு புறம்பாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல் லாமல் கடன் வாங்கிய நபர்களின் வாகனங்களை மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வது குண்டர் களை வைத்து மிரட்டுவது போன்ற செயல்கள் அதி கமாகி வருகிறது. இவை அனைத்தையும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து கட்டுப் படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாரதி நகரில் இயங்கி வரும் தனியார் நிறு வனத்தின் முன்பு வரும் 16-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்,

    தினம் தினம் இலங்கை ராணுவத்தினரால் கட லுக்குச் சென்று வீட்டுக்கு திரும்புவதை கேள்விக்குறி யாக சென்று வரும் தமிழக மற்றும் குறிப்பாக ராமேசுவ ரம் மீனவர்களின் உயிருக் கும் உடைமைகளுக் கும் மத்திய அரசு பாதுகாப்பு மற்றும் உயிருக்கு உத்தரவா தம் வழங்க வேண்டும் ஒரு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட நிர் வாகத்தின் சார்பாக போராட்டம் நடத்த வேண்டும்,

    அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் வழங்கிய அனைத்து நிர்வாகி களுக்கும் செயற்குழு கூட்டம் பாராட்டு, நன்றி, வாழ்த்துக் களை தெரிவிப்பது, விரை வில் சிக்கலை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றி யத்தை உருவாக்க வேண்டும் அதற்காக கடலாடி ஒன்றி யத்தின் சார்பாக விரைவில் ஒரு உண்ணா நிலை போ ராட்டம் நடத்த வேண்டும்,

    முல்லைப் பெரியாற்றிலி ருந்து நேரடியாக ராட்சத குழாய்கள் மூலம் மதுரை வரை கொண்டு வந்துள்ள குடிநீரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீட்டிப்பு செய்து கொண்டு வந்து ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்சினையை முழு மையாக தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா நன்றி கூறினார்.

    Next Story
    ×