search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் பெற்ற மாவட்ட கலெக்டர்
    X

    மைக்கேல் பட்டணம் சென்ற கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனு பெற்றார்.

    பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் பெற்ற மாவட்ட கலெக்டர்

    • பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றார்.
    • மாவட்டம் முழுவதிலும் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக் டர் தெரிவித்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் முதுகுளத்தூர் தாலுகா மைக்கேல் பட்டணம் கிரா மத்தில் பொதுமக்களி டம் குறைகள் கேட்டு அவர்களி டம் இருந்து மனுக்களை பெற்றார். முன்னதாக அவரை மைக்கேல் பட்ட ணம் ஊராட்சி மன்ற தலை வர் குழந்தை தெரஸ் சிங்க ராயர் வரவேற்றார்.

    அப்போது கலெக்டர் விஷ்ணுசந்திரன், பொதுமக் களிடம் போதுமான குடிநீர் கிடைக்கிறதா? நிலத்தடி நீர் உள்ளதா? என கேட்டறிந் தார். இதற்கு பதிலளித்த பொதுமக்கள் குடிநீர் தின சரி வருவதில்லை எனவும், சிலநேரங்களில் சிரமம் ஏற்படுகிறது என தெரிவித் தனர். மேலும் கலெக்டரிடம் போர்வெல் அமைத்துத்தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்தார்.

    மைக்கேல் பட்டணம் பஞ்சாயத்து எல்லையில் சோலார் பிளாண்ட் உள் ளது. ஆனால் தொழில் வரி செல்லூர் பஞ்சாயத்தில் செலுத்தப்படுகிறது. சோலார் பிளாண்டை சுற்றி யுள்ள சாலைகளை மைக் கேல் பட்டணம் ஊராட்சி தான் மராமத்து செய்து வருகிறது. ஆகையால் மைக் கேல் பட்டணம் ஊராட்சி எல்லையில் உள்ள சோலார் பிளாண்ட் தொழில் வரியை மைக்கேல் பட்டணம் ஊராட்சியில் செலுத்தினால் ஊராட்சித் வளர்ச்சியடை யும் என்றார். மேலும் பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்த னர். மேலும் பேவர்பிளாக் சாலை, கல்வெட்டுகள் வேலை முடிக்கப்படாமல் உள்ளவற்றை சுட்டிக் காட்டி உடனடியாக முடிக்க வேண் டும் என உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் பிரபாவதி, ஊராட்சி எழுத் தர் லீலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர். பின் னர் பிரபக்கவூர் ஊராட்சி மீசல் கிராமத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக் களிடம் குறைகள் கேட்டார். பிரபக்களுர் ஊராட்சி மன்ற தலைவர் தீப்ரநீதிரா ஜன் வரவேற்றார். குடிநீர், மின்விநியோகம் சாலை வசதி ஆகியவற்றை கேட்ட றிந்தார். மீசல் கிராமம் முழுவதும் மண் சாலையாகவே உள் ளன. இதனை பேவர் பிளாக் சாலையாக மாற்றித் தரவேண்டும் எனவும், போர்வெல் அமைத்துதர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மாவட்டம் முழுவதிலும் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக் டர் தெரிவித்தார்.

    Next Story
    ×