பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்

பணிக்காலத்தில் இறந்த 2 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆணையை ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
பணி காலத்தில் இறந்த பணியாளர் வாரிசுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார். 
பணி காலத்தில் இறந்த பணியாளர் வாரிசுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார். 
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகமாக இருந்தன.

கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூ டிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அப்போது தான் அது போன்ற மனுக்கள் திரும்ப திரும்ப வராது. எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலகில், பரமக்குடி வட்டம், கொடிக்குளம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து 21.5.2018 அன்று பணியிடையே இறந்த மாரிமுத்து என்பவரது மனைவி கலையரசிக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி யிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும், முதுகுளத்தூர் வட்டம், புளியங்குடி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து 6.12.2017 அன்று பணியிடையே இறந்த சதீஸ் என்பவரது மனைவி ஜெயசிந்தியாவிற்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையி னையும் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com