கோவில் வருடாபிஷேக விழா

கீழக்கரை அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் வருடாபிஷேக விழா நடந்தது.
கோவில் விழா
கோவில் விழா
Published on

கீழக்கரை

கீழக்கரை அருகே லட்சுமிபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் கடந்த ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு மார்ச் 3-ந்தேதி அன்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து நேற்று வருடாபிஷேகம் நடந்தது. 

முன்னதாக விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, மஹா கணபதி ஹோமம் நடந்தன. மூலவர்கள் முத்துமாரியம்மன், முருகன், விநாயகர், கருப்பண்ணசாமி, முனீஸ்வரர், பத்திரகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது.

பூஜைகளை நாகர்கோவில் சந்திரசேகர செல்லமணி சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை லட்சுமிபுரம் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் ராமசாமி, முனியசாமி, செல்வராஜ், நாகநாதன், விஜயகுமார், கார்த்திக் செய்திருந்தனர். 

மாலையில் நடந்த விளக்கு பூஜை, மாங்கல்ய பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com