search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகம்
    X

    குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகம்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 ஆண்டுகளில் 41 ஆயிரத்து 311 வீடுகளுக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாட்டில் குழாய் நெட்வொர்க் உள்கட்டமைப்பு மூலம் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு இயற்கை எரிவாயுவை எளிதாக வழங்க ஏ.ஜி. அண்ட் பி. பிரதாம் திட்டங்களை அறிவித்துள்ளது.

    இந்த நிதியாண்டில் பரமக்குடி, கீழக்கரை, சாயல்குடியில் 3 துணை பூஸ்டர் எரிவாயு நிலையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் கீழக்கரையில் இரும்பு குழாய் பதிக்கும் பணியை எரிவாயு தேவை அதிகரித்து வருவதால் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, சாயல்குடி உள்பட பல்வேறு இடங்களில் மேலும் நிலையங்களை தொடங்க இலக்கு வைத்துள்ளது.

    24 மணி நேர இயற்கை எரிவாயு விநியோகத்தை ராமநாதபுரம், பட்டணம்காத்தான், ராமேசுவரம் பகுதிகளில் எரிவாயு கட்டங்களை நிறுவி மார்ச் 2023-க்குள் 15 ஆயிரம் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு என்ற இலக்குடன் உள்கட்டமைப்பு பணிகளில் செயல்படுகிறது.

    இந்த விரிவான திட்டத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும். பரமக்குடி, கீழக்கரை, சாயல்குடி ஆகிய பகுதிகளில் இந்த நிதியாண்டில் 3 துணை பூஸ்டர் நிரப்பும் நிலையங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன.

    பட்டினம்காத்தான், சக்கரக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் நடுத்தர அடர்த்தி பாலி எத்திலீன் நெட்வொர்க்குகள் மூலம் இந்த பகுதிகளில் பி.என்.ஜி. சேவையை தொடங்க உள்ளன. அடுத்த 7 ஆண்டுகளில் 11 எரிவாயு நிரப்பு நிலையங்களை தொடங்குவதன் மூலம் 41 ஆயிரத்து 311 வீடுகளுக்கு பி.என்.ஜி. விநியோகத்தை உறுதி செய்யும் என ஏ.ஜி. அண்ட் பி.பிரதாம் மண்டலத் தலைவர் பூமாரி தெரிவித்தார்.

    Next Story
    ×