இலங்கை அகதி தற்கொலை

மண்டபம் முகாமை சேர்ந்த இலங்கை அகதி தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு செல்லாமல் செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை கண்டித்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளார்.
இலங்கை அகதி தற்கொலை
Published on

ராமநாதபுரம்

இலங்கையை சேர்ந்த அந்தோணி என்பவரின் மகன் நிரோஜன் (வயது22). இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து செல்போனில் கேம் விளையாடி கொண்டு திரிந்துள்ளார்.

இதனை இவரது தாய் கண்டித்து வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதில் மனவேதனை அடைந்த நிரோஜன் வீட்டிலிருந்த எலி பேஸ்டை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு வீட்டிற்கு பின்புறம் படுத்துக்கொண்டார். இதனை பார்த்த அவரது நண்பர்கள், நிரோஜனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்பு மண்டபம் கேம்ப் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்குஅவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்.

பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிரோஜன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com