search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
    X

    சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

    • மண்டபத்தில் 26-ந்தேதி சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
    • குடற்புழு நீக்க மருந்துகள், புற ஒட்டுண்ணிகள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கலைஞ ன் நூற்றாண்டு விழா வினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவிலான 3 கால்நடை மருத்துவ முகாம்கள், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி மாவட்டத்தில் 2-வது முகாமானது வருகிற 26-ந்தேதி ராமநாதபுரம் கோட்டம் மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி கிராமத்தில் நடத்தப்பட உள்ளது.

    இம்முகாமில் கால்நடை களுக்கு தேவையான தடுப்பூசிகள், குடற்புழு நீக்க மருந்துகள், செயற்கை முறை கருவூட்டல், சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள், புற ஒட்டுண்ணி கள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் மூலம் கால்நடைகளுக்கான தோல் நோய்கள் கண்டறிதல், ரத்தம், சளி, பால் ஆகிய மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, இதன் தொடர்பான நோய் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்போர்களுக்கு விளக்கப்பட உள்ளது. கிடேரி கன்றுகளுக்கான கருச்சிதைவு நோய் தடுப்பூசி மேற்கொள்ளப்பட உள்ளது. அத்துடன் சிறந்த கறவைப் பசு மற்றும் கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    விவசாயிகள் தங்கள் கால்நடைகளை சிறப்பு முகாம்களுக்கு அழைத்து வந்து இத்திட்டத்தின் மூலம் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×