search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரை தேடி வரும் சரணாலய பறவைகள்
    X

    அபிராமம் பகுதியில் உள்ள வயல்களில் இரை தேடும் பறவைகள். 

    இரை தேடி வரும் சரணாலய பறவைகள்

    • அபிராமம் பகுதியில் இரை தேடி சரணாலய பறவைகள் வருகின்றன.
    • வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்பிச் செல்வது வழக்கம்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சித்தி ரங்குடி கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்பிச் செல்வது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் போதிய பருவமழை பெய்யாததால் சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு பறவை கள் வரத்து குறைந்து வெறிச்சோடி காணப் பட்டது.

    பெரும்பாலும் இங்கு வரும் பறவைகள் 150 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இரைதேடும். கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் இரை கிடைக்காததால் கொக்கு உள்ளிட்ட பறவைகள் இங்கு அறுவடை முடிந்த வயல்களில் பருத்தி, மிளகாய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது புழு, பூச்சிகளை இரையாக தின்று வருகின்றன. அபிராமம் பகுதியில் உள்ள வயல்களிலும் கொக்குகள் கூட்டம், கூட்டமாக வந்து இரை தேடி வருகின்றன.

    Next Story
    ×