ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கீழக்கரையில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர். முடிவில் செயலாளர் எபன் பிரவீன் குமார் நன்றி கூறி னார்.
புதிய நிர்வாகிகளாக பதவியேற்றவர்களை படத்தில் காணலாம்.
புதிய நிர்வாகிகளாக பதவியேற்றவர்களை படத்தில் காணலாம்.
Published on

கீழக்கரை

கீழக்கரை ரோட்டரி சங்கம் 2023-24 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சங்கத் தின் தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் முதன்மை விருந்தினராக மாவட்ட ஆளுநர் தேர்வு மீரான் கான் சலீம் கலந்து கொண்டு தலைவர் செயலாளர் மற்றும் புதிய நிர்வாகிகளை பதவி பிரமாணம் செய்து வைத்தார். கவுரவ விருந்தின ராக முன்னாள் ஆளுநர் சின்னதுரை அப்துல்லா, மாவட்ட ஆளுநர் பரிந்துரை தினேஷ் பாபு கலந்து கொண்டு பேசினர்.

துணை ஆளுநர் கீதா ரமேஷ் சங்கத்தில் புதிய உறுப்பினர்களை வரவேற்று வாழ்த்துரை வழங்கினார் கள். தேவகோட்டை மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் பவுலியன்ஸ் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு ரோட்டரி சங்கத் தின் சேவைகள் மற்றும் வளர்ச்சிகளை பற்றி எடுத் துரைத்து பேசினார்கள்.

சங்கத்தின் சார்பாக கல்வி, மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது. கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வியில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரிந்த ஆசிரியர் களுக்கும், தேர்வுகளில் சாதனைகள் செய்த மாண வர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ரோட்டரி சங்கத்தின் ஆண்டு அறிக்கையை பொருளாளர் சுப்பிரமணியன் அவர்கள் சமர்ப்பித்தார்கள். விழாவில் சங்கத்தின் பட்டய தலைவர் பேராசிரியர் அலாவுதீன் அவர்கள் வரவேற்றார். பேராசிரியர் பாலசுப்பிரமணியன், நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் கீழக்கரை சங்கத்தின் முன்னாள் தலை வர்கள் ராசிக்தீன், செல்வ நாராயணன், டாக்டர் சுந்த ரம், சித்திரவேல், கேசவன், கண்ணன், சபீக், மிப்தா ஹுதீன், மரியதாஸ், பெண் வழக்கறிஞர் நதியா மற்றும் பல்வேறு ரோட்டரி சங் கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவர், துணை தலைவர், கவுன்சிலர் கள், ஜமாத்தார்கள், பாதிரியார்கள், அரசியல் பிரமுகர் கள், ஊர் முக்கியஸ்தர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் எபன் பிரவீன் குமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com