search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெண்டர் பணிகளை ஒப்பந்ததாரர்கள் விரைந்து முடிக்க கோரிக்கை
    X

    டெண்டர் பணிகளை ஒப்பந்ததாரர்கள் விரைந்து முடிக்க கோரிக்கை

    • கீழக்கரையில் டெண்டர் பணிகளை ஒப்பந்ததாரர்கள் விரைந்து முடிப்பதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளது.
    • டெண்டர் எடுத்த பணிகள் குறைபாடு இருக்கிறது.

    கீழக்கரை

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் திற்கு அரசு திட்டங்களை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தமிழக அரசு சார்பாக நியமிக்கப் பட்டுள்ளதை கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வரவேற்கிறோம்.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திட்ட பணிகளில் அதிக அளவு தேக்க நிலையில் இருக்கிறது டெண்டர் எடுத்த பணிகள் ஒப்பந்தக்காரர்கள் விரைந்து முடிப்பதில்லை யாரும் முறையான ஆய்வு செய்வதில்லை. பல இடங்களில் டெண்டர் எடுத்த பணிகள் குறைபாடு இருக்கிறது.

    கழிவுநீர் பைப் லைன் போட்ட இடங்களில் கழிவுநீர் வெளியே ஓடுகிறது.இதனால் மக்கள் வரி பணமும் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு முன்பு என்னென்ன டெண்டர் எடுத்த பணிகள் எல்லாம் குறைபாடு இருக்கிறது என்பதை ஆராய்ந்து மீண்டும் அதை முறைப்படுத்தி ஒப்பந்தம் எடுத்தவர்களை சரி செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    மேலும் தமிழக அரசு சார்பாக எந்த வித திட்டப் பணிகளும் கீழக்கரையில் அமல்படுத்தவில்லை. உதாரணமாக கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையை நம்பி உள்ளனர். ஆனால் அரசு சார்பில் குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் நிதி ஒதுக்கி கீழக்கரை மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும்.

    கீழக்கரையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வேகமாக அமைக்க வேண்டும். கீழக்கரை கடற்கரையில் கழிவுநீர் சேராமல் தடுக்க சுத்திகரிப்பு திட்டம் அல்லது பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் சரியாக வருவதில்லை. அதனால் புதிய மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் முறையாக கிடைக்கச் செய்ய வேண்டும்.

    புதிதாக தண்ணீர் தொட்டிகள் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். எரியாத நிலையில் உள்ள மின்விளக்கு களை மாற்றி புதிதாக வாங்கப்பட்ட எல்.இ.டி.விளக்குகளை பொருத்த வேண்டும். திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி ஆணையர், பொறியாளர், சுகாதார ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×