search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதுபாட்டில் உடைப்பு போராட்டம்
    X

    கைதானவர்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட காட்சி.

    பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதுபாட்டில் உடைப்பு போராட்டம்

    • பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதுபாட்டில் உடைப்பு போராட்டம் நடத்தினர்.
    • இந்த போராட்டத்தின் இறுதியில் பங்கேற்ற அனை–வ–ரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    ராமநாதபுரம்

    புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுறுத்த–லின்படி தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை வலியு–றுத்தி மதுபாட்டில் உடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கை வலியு–றுத்தி கேணிக்கரையில் உள்ள அரசு மதுபானக் கடை முன்பாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்துக்கூரி தலைமையில் மதுபாட்டில் உடைப்பு போராட்டம் நடை–பெற்றது.

    இப்போராட்டத்தில் நகரச் செயலாளர் சக்தி–வேல், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சேகர், ராம–நாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முரளி, மண்டபம் ஒன்றிய செயலா–ளர் சுடர் மற்றும் அக்கட்சி–யினர் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்தின் இறுதியில் பங்கேற்ற அனை–வ–ரையும் காவல்துறை–யினர் கைது செய்தனர்.

    Next Story
    ×