கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்ற கோரி மனு

கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்றக்கோரி ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். ராமநாதபுரத்தில் இந்து தேசிய கட்சி மாநில செயலாளர் பேசினார்.
கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்ற கோரி மனு
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் இந்து தேசிய கட்சி மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா கூறியதாவது:-

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் தொடர்ந்து தமிழக அரசும், காவல்துறையும் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்குரிய செயல் ஆகும்.இவற்றை விரைவில் அகற்றாவிட்டால் இந்து தேசிய கட்சியின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையை இந்து தேசிய கட்சி மேற்கொள்ளும்.

இது குறித்து ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com