search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யூனியன் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள்
    X

    யூனியன் கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    யூனியன் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள்

    • முதுகுளத்தூர் யூனியன் கூட்டத்தை அதிகாரிகள் புறக்கணித்தனர்.
    • கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சம்பந்தப்பட்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் சண்முக பிரியா ராஜேஸ் தலைமை யில் நடந்தது. ஆணையாளர் ஜானகி முன்னிலை வகித் தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி கள்) தேவபிரியா வரவேற்றார். இதில் மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் சசிகலா (கருமல்),செல்வி (மேலகன்னிசேரி), கலைச் செல்வி (விளங்குளத்தூர்), முருகன் (செல்வநாயகபுரம்), அரிச்சுணன் (வளநாடு) ஆகியோர் கவுன்சில் நிதி அனைத்து கவுன்சிலர்க ளுக்கும் பாரபட்சமின்றி ஒதுக்க வேண்டும். சாலை யோரம் உள்ள முள்செடி களை வெட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். கருங்கால குறிச்சி கிராமத்தில் நிழற் குடை அமைக்க வேண்டும், வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தில் காலனி பகுதி, கீழ கன்னி சேரி பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    விளங்குளத்தூர் பகுதி யில் இருந்து பருக்கைக்குடி செல்லும் தார்ச்சாலை பழுத டைந்துள்ளதை மரா மத்து செய்ய வேண்டும். பருக்கைக்குடி கிராமத்தில் 2 படித்துறை கட்ட வேண் டும். வெண்ணீர் வாய்க்கால். கிராமத்தில் சுடுகாடு வரை சாலை அமைக்க வேண்டும்.கண்மாய்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சம்பந்தப்பட்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது கவுன்சிலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    Next Story
    ×