search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவ.பாலுச்சாமி தலைமை வகித்தார்.மாவட்ட இணை செயலாளர் மலைச்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் அற்புதராஜ், ஆர்.கே.முனி யசாமி, முத்துக்கூரி ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முனியசாமி அனைவரையும் வர வேற்றார். பூரண மது விலக்கை வலியுறுத்தியும், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதை கண்டித்தும், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22-க்கும் மேற்பட்ட பலி யான சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகி வசந்தி, ஒன்றிய செயலா ளர்கள் முனியசாமி, சேகர், சுரேஷ், பேரின்பராஜ், விலாசி, பெரியசாமி மற்றும் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×